“அமைச்சர் பதவிக்காக சாட்டையால் தன்னைத்தானே அண்ணாமலை அடிச்சுக்கிட்டாரு” - திமுக டி.கே.எஸ். இளங்கோவன்

 
அண்ணாமலை

அமைச்சர் பதவியை எதிர்பார்த்து அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையில் அடித்துக் கொண்டுள்ளார் என திமுக செய்தி தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக இன்று திருச்சியில் நடைபெற்று வரும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்புத்துறை தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், “அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தில் உரிய நடவடிக்கை  எடுக்கப்பட்ட போதும் வேண்டுமென்றே திமுக மீது களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள்.

திமுக இளங்கோவன்

குற்றவாளியை கைது செய்த பின்பு வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் பல ஆண்டுகளாகவே அந்த பகுதியில் திரிந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தவில்லை. மாறாக எல்.முருகன் கையில் வேல் தூக்கிக் கொண்டு நடந்த பின்பு தான் அவருக்கு இணை அமைச்சர் பதவி கிடைத்தது போல தனக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே அண்ணாமலை சாட்டையால் அடித்து கொண்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி

கர்நாடகாவில் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட போது அங்கு காவல் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. கெளரி லங்கேஷ் கொலை  குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கெளரி லங்கேஷை கொலை செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலை விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web