பி.எட்., எம்.எட்., மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 
பிஎட்


 
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். படிப்புகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கால அவகாசம்  செப்டம்பர் 30 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்காத மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம்  விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மற்றும் எம்.எட். பாடப் பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 30ம் தேதி  வரை செயல்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.  


தமிழ்நாடு முதல்வரின் ர்  ஆலோசனையின்படி 20.06.2025 அன்று சென்னை இராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ஆம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 பணியிடங்கள்  என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையும் படி  கேட்டுக் கொள்கிறேன். 


மாணவர் சேர்க்கைக்கான கூடுதல்  www.lwlase.ac.in என்ற இணையதளத்தின் மூலம்  தெரிந்து கொள்ளலாம். அதேபோல், எம்.எட். பாடப்பிரிவில் காலிப்பணியிடங்களை  மாணாக்கர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி 30.09.2025 வரை செயல்படும். விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் www.tngasa.in என்ற விண்ணப்பித்து பயனடையலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?