தொடரும் சோகம்... குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மீண்டும் கட்டிட விபத்து... ஒருவர் படுகாயம்!

 
குடிசை மாற்று வாரியம்

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் 50 ஆண்டுகள் பழமையான குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு நீண்ட காலம் ஆவதால் திடீர் திடீரென  இடிந்து விழுவது வாடிக்கையாகி வருகின்றன.

பட்டினப்பாக்கம் காவல் நிலையம்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதே குடிசை மாற்று வாரியத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில்  சையத் குலாம் என்பவர் உயிரிழந்தார். 
இந்நிலையில், அந்த பகுதியில் மீண்டும் ஒரு பால்கனி இருந்து விழுந்துள்ளது.  இதில் 3 வது மாடியின் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததில், மோகன் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

குடிசை மாற்று வாரியம்

சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் வந்து தீவிர விசாரணை நடத்தினர். சேதமடைந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள்  அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web