டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி... 5000 பேர் மீது வழக்குப்பதிவு!

 
டங்ஸ்டன்

மதுரை  மாவட்டத்தில் மேலூர் அருகே நடந்த டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேலூர் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை தல்லாகுளம் வரை விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து பேரணியாக சென்று மதுரை நகரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

டங்ஸ்டன்

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நடைபயணமாக செல்ல ஆயத்தமான  நிலையில் அவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தடுத்து நிறுத்தினர். காவல்துறை அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.  

நரசிங்கம்பட்டியில் இருந்து பேரணியாக ஆயிரக்கணக்கானவர்கள் நடைபயணமாக கிளம்பியது. இதே போல்  மாங்குளம் பிரிவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்தது.  அங்கு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

டங்ஸ்டன்
இந்நிலையில் மதுரை மேலூர் அருகே நடந்த டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி தொடர்பாக 5000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. அனுமதி கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5000  விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது தல்லாகுளம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web