இன்று காலை முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் துவங்கியது... ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்... முழு விவரம்!

 
பொறியியல் கல்லூரி

இன்று காலை தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று காலை முதல் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். 

கல்லூரி

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள  மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான   www.tngasa.in மூலம் இன்று காலை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் ( மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.   

விண்ணப்பக் கட்டணம்  : ரூ.48/-
பதிவுக் கட்டணம் : ரூ.2/-
SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.
பதிவுக் கட்டணம் : ரூ.2/-

கல்லூரி மாணவிகள்
கட்டணம் செலுத்தும் முறை

விண்ணப்ப மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI  இணையதளம் மூலம்  செலுத்தலாம்.  கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில்  "The Director, Directorate of Collegiate Education, Chennai 15" என்ற பெயரில் இன்று மே 6ம் தேதியோ அல்லது  அதற்குப் பின்னரே பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம். கால மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு  044-24343106 / 24342911 அழைக்குமாறும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web