11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்... தமிழக அரசு திடீர் உத்தரவு!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி , புதுக்கோட்டை, நாமக்கல், கோவை திருப்பூர், நாகப்பட்டினம் , தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகள் அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அதிகாரிகள் இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார் ஐ.ஏ.எஸ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரஜேந்திர நவ்நித் ஐ.ஏ.எஸ், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மதுமதி ஐ.ஏ.எஸ்., தூத்துக்குடி மாவட்டத்திற்கு வீர ராகவ ராவ் ஐ.ஏ.எஸ்., கள்ளக்குறிச்சிக்கு தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ்., திருப்பூருக்கு வள்ளலார் ஐ.ஏ.எஸ், கோவைக்கு நந்தக்குமார் ஐ.ஏ.எஸ்., புதுக்கோட்டைக்கு சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ், நாமக்கல் மாவட்டத்திற்கு அசியா மரியம் ஐஏஎஸ்., நாகப்பட்டினத்திற்கு மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ் மற்றும் சென்னைக்கு ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ் ஆகியோ கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!