டூர் போறீங்களா உஷார்... வாலிபருக்கு ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி!
இந்தியா முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து பலரும் சுற்றுலா செல்ல இப்போதே திட்டமிட்டு வருகின்றனர். குடும்பம் குடும்பமாக நண்பர்கள் உறவினர்களுடன் கொண்டாடி தீர்த்து விட வேண்டும் என கையில் கிடைத்ததை சுருட்டி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவோம். ஆன்லைனில் குறைவான விலையில் தங்கும் அறைகள் இருந்தால் அதை நேரில் பார்க்காமல் புக் செய்துவிட்டு கிளம்புவோம். இங்கு சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமாக சம்பவத்தை பாருங்க. சுற்றுலா செல்ல ப்ளான் பண்ணும் போது கவனமா செய்ங்க.
DO NOT BOOK CHEAP HOTELS IN PAHARGANJ, DELHI
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) April 23, 2024
Got a frantic call from a friend. Her colleague who was in Delhi for a conference near Paharganj booked a cheap hotel because he had to just keep his luggage and go for a conference
After his work when he came back to hotel to pick…
டெல்லியின் பஹர்கஞ்சில் சுற்றுலாப் பயணி ஒருவர் "மலிவான ஹோட்டலை" முன்பதிவு செய்திருந்தார். பத்திரிக்கையாளர் தீபிகா நாராயண் பரத்வாஜ் அவரது நண்பரின் சக ஊழியர், அருகிலுள்ள ஒரு மாநாட்டில் கலந்து கொண்டபோது தனது சாமான்களை சேமிக்க பட்ஜெட் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்தார். இது குறித்து தீபிகா தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது வேலை முடிந்ததும் ஹோட்டலுக்குத் திரும்பினார். அந்த சமயத்தில் திடீரென அவரது அறைக்குள் வலுக்கட்டாயமாக 4 முதல் 5 பேர் கொண்ட குழு நுழைந்தது. அதில் இருந்த ஒரு பெண் உடனடியாக தனது ஆடைகளை அகற்றினார்.
இவர் என்ன என்பதை புரிந்து கொள்வதற்கு முன் அந்த நபர்களால் தாக்கத் தொடங்கினர்.
Update : I have been contacted by @DelhiPolice @DCPCentralDelhi on this matter. They've extended all support & taking it seriously. Whether cop who was with goons is a real cop or not is a matter of investigation. Have connected the victim with senior officers.
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) April 23, 2024
தாக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். போலீசில் சொன்னால் இதை வெளியிட்டு விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அதற்கு லஞ்சத் தொகையாக ரூ15,000 தரும்படி கேட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை, ஏனெனில் "காவல்துறையும் இதில் ஈடுபட்டுள்ளது" என்று தெரிகிறது.
இந்த குழப்பமான சம்பவம், தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக இதுவரை அறிந்திராத பகுதிகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு முன் பயணிகள் ஹோட்டல் மதிப்புரைகளை முழுமையாக ஆராய்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகே முன்பதிவு செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார். இச்சம்பவம் குறித்து அனைத்து ஆதாரங்களையும் போலீசிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சுற்றுலா செல்பவர்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!