பகீர்... தமிழகம் முழுக்க ஸ்ட்ரைக் நடக்கும்... வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரின் சதி திட்டம் அம்பலம்.. உறவினர் கைது!

 
கீர்த்தி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பிரபாகரன் என்பவர், காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் அவில்தாராக பணியாற்றி வருகிறார். அண்மையில் இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதில், கோவில் அருகே உள்ள ஒரு கடை பிரச்சினை தொடர்பாக தனது மனைவியை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து மானபக்கம் செய்து, அரைநிர்வாணம் செய்து தாக்கியதாக கண்ணீரோடு புகார் தெரிவித்தார். தனது மனைவி உயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். 

இந்த வீடியோ பரவி பரபரப்பை உண்டாக்கியது. ராணுவ வீரரின் வீடியோவை அடுத்து அவருக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகள் பலரும் களத்தில் இறங்கினர். அரசு, காவல்துறை மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ராணுவ வீரரின் மனைவிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என திருவண்ணாமலை எஸ்பி தெரிவித்திருந்தார். 

கீர்த்தி

மேலும் ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஹரிஹரன் மற்றும் செல்வராஜ் ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திருப்பங்களுடன், ராணுவ வீரரின் சதிதிட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறிப்பிட்ட இடத்தில் பேன்சி கடை நடத்தி வந்த பிரபாகரன் மனைவியின் தந்தைக்கும், கடை உரிமையாளுக்கும் ஏற்பட்ட மோதல் என தெரிய வந்தது. கடையை காலி செய்ய கடை உரிமையாளர் ராமு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி காலி செய்ய தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். 

இந்தநிலையில் இரு தரப்புக்கும் இடையே பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியின் சகோதரன், பாய்ந்து சென்று கத்தியால் கடை உரிமையாளர் ராமுவை தாக்கினார். இந்த வீடியோவின் ஒரு பகுதியை தான் ராணுவ வீரர் பிரபாகரனும் வெளியிட்டிருந்தார்.

ஆனால் முழு வீடியோவில் கடை உரிமையாளரை, ராணுவ வீரர் மனைவி கீர்த்தியின் சகோதரர் தாக்குவதும், பின்னர் அவரது ஆதரவாளர்கள் கத்தியால் தாக்கியவரை பிடித்து தாக்குவதும் பதிவாகி இருந்தது. மேலும் ராணுவ வீரரின் மனைவியையோ, அவரது பெற்றோரையோ யாரும் தாக்கவில்லை என்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

ஆனால், ராணுவ வீரர் தனது மனைவி அரை நிர்வாணம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு ராணுவ வீரர் சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக ராணுவ வீரர், தனது நண்பரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

கீர்த்தி

இது தொடர்பாக ராணுவ வீரர் பிரபாகர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோவில், இந்த பிரச்சனைக்காக இறங்கி வேலை செஞ்சிருக்கேன். தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக் ஆக போகுது. போலீஸ் விசாரணையின் போது ஒண்ணுக்கு இரண்டாக சொல்லுங்க. பாஜக, நாம் தமிழர் என அனைவருக்கும் பரப்பி விட்டேன். இது வரை எனது வீடியோவை 6 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். விசாரணையின் போது எனது மனைவியை அரை நிர்வாணம் செய்து அடித்தார்கள் என கூற வேண்டும். வீடியோ வெளியானதையடுத்து அமைச்சர்கள், முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் என பலரும் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இந்த பிரச்சனையை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும். கத்தியால் தாக்கியதாக கூற வேண்டாம். பிரச்சனையை மிகைப்படுத்தி விசாரணையில் கூறுங்கள். கடை உரிமையாளர்களை காவல்துறை நன்றாக பார்த்துக் கொள்ளும். முக்கிய பார்ட்டி என்னிடம் நேரடியாகவே பேசியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். கடை உரிமையாளர் தரப்பை மொத்தமாக தூக்கி விடுவார்கள் என ராணுவ வீரர் பிரபாகர் பேசியுள்ளார். 

இந்த ஆடியோ மூலம் ராணுவ வீரரின் செயல் அம்பலமானதால், போலீசார், ராணுவ வீரர் பிரபாகரன் சதி செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவை தொடர்பாக விசாரணை நடத்தினர். ராணுவ வீரரின் மனைவி தலைமறைவானார். மேலும் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி, மைத்துனர்கள் உதயா, ஜீவா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.  ராணுவ வீரருடன் செல்போனில் பேசி  சதித் திட்டம் தீட்டியதாக உறவினர் வினோத்தை தற்போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web