அடியாட்களுடன் வந்து மிரட்டுறாரு... நடிகை ஸ்ரீதிவ்யா ஸ்ரீதர் கதறியபடி புகார்!

 
திவ்யா ஸ்ரீதர்

செவ்வந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். அதேபோல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேளடி கண்மணி என்ற சீரியல் சீரியலில் நடித்து புகழ்பெற்றார். இவர் அதே சீரியலின் ஹீரோவான அர்னவ்வை திவ்யா காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்யாமலே திவ்யா கர்ப்பம் ஆனார். பின்னர் வளைகாப்பு நடைபெற்றது. கடந்தாண்டு திருமணம் செய்துக்கொண்டதாகவும் கூறினர்.

அதனைதொடர்ந்து சில நாட்களில் இந்த அர்னவ்- திவ்யா ஸ்ரீதர் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. கர்ப்பமாக இருந்த திவ்யா மருத்துவமனையில் இருந்தபோதே ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த வீடியோவில், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறினார். அர்னவ் வேறு ஒரு நடிகையுடன் ரகசிய உறவில் இருப்பதாகவும், அதனால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கூறி ஆதாரத்தை வெளியிட்டார். தொடர்ந்து அவர் அளித்த புகாரில் அர்னவ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைதான அர்னவ் பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

திவ்யா ஸ்ரீதர்

அதன்பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில், நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. அவர் குழந்தையுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். 

இந்த நிலையில், நடிகர் அர்னவ் தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்து தன்னுடைய வீட்டில் தகராறு செய்ததாக நடிகை திவ்யா ஸ்ரீதர் தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இவ்ளோ நாள் வீட்டு பக்கமே வராமல் இருந்த அர்னவ், திடீரென 13 பேருடன் வந்து என் வீட்டு கதவை தட்டினார். ஆனால் கதவை திறக்காத நிலையில், போலீஸ் அனுமதியின்றி அவர் இங்கே வரக்கூடாது என சொன்னேன். உடனே அவருடன் வந்தவர்கள் இது அர்னவ் வீடு எனக்கூறி கதவை தள்ளினார்கள்.

நான் என்னுடைய வழக்கறிஞர்கள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டேன். அர்னவ் என்னை நோட்டமிடுவதற்காக உளவாளி ஒருவரை வைத்திருக்கிறான். அதனால் நான் எங்கு செல்கிறேன் என்கிற அனைத்து விஷயமும் அவனுக்கு தெரிந்துவிடுகிறது. கைக் குழந்தையுடன் கஷ்டப்பட்டு காலையில் ஷூட்டிங் சென்றால், இரவு தான் வீட்டிற்கு வருகிறேன். என்னப்போன்று அர்னவால் வேறு எந்த பெண்ணும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக தான் அந்த ஆடியோவை வெளியிட்டேன்.

திவ்யா ஸ்ரீதர்

அதைக்கேட்டு இங்கு வந்துவிட்டு, இது என்னோட வீடு காலிபண்ணுனு சொல்றாரு. தற்போது அவர் நிபந்தனை ஜாமினில் இருக்கிறார். இந்த சமயத்தில் அவர் என்னுடைய வீட்டிற்கு வரவே கூடாது. என்னை கொடுமைப்படுத்தி, என் குழந்தையையும் கொல்ல பார்த்த அர்னவ்வால் தற்போது எனக்கு பாதுகாப்பு இல்லை. வீட்டில் 2 வயதானவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் அர்னவ் என் வீட்டிற்கு வந்து மிரட்டி ரவுசியிசம் செய்கிறார். இந்த வேளையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரிடமும் கேட்டுக்கொள்கிறேன்,  என கண்ணீர் மல்க திவ்யா பேசியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web