அரவிந்த் கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல அனுமதி!

 
அரவிந்த் கெஜ்ரிவால்


2024 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  அமேதி மாவட்டத்தின் கெளரிகஞ்ச் மற்றும் முசாபிர்கானா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது  குற்றச்சாட்டுகள் புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு  தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால்
இதன் காரணமாக எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்திற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. தற்போது தடை காரணமாக  வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அதை புதுப்பிக்க அனுமதிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால்மனு தாக்கல் செய்திருந்தார். 

அரவிந்த் கெஜ்ரிவால்
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில்  உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை நீதிமன்றம் விசாரித்தது. அதன்படி கெஜ்ரிவாலின் கடவுச்சீட்டைப் புதுப்பித்துக்கொள்ள நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது., அவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய நிலையில், அவருக்கு சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அவரது வழக்கறிஞர் ருத்ர பிரதாப் சிங் மதன் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?