இந்தியா முழுவதும் 474 கட்சிகள் பதிவு ரத்து...தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
இந்தியா முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் படி தமிழகத்தில் 42 கட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,046 ஆக குறைந்துள்ளது. 2019 முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகள் விதிமீறல்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ”பதிவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை சட்ட விரோதமானது. கட்சிகள் அனைத்து தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, ”தேர்தலில் போட்டியிடவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒரு கட்சியின் பதிவை ரத்து செய்ய முடியாது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறது தேர்தல் ஆணையம்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
