மாடி வீடு இடிந்து விழுந்து 15 பேர் படுகாயம்!
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் பாரத் நகர் குடிசை பகுதி அமைந்துள்ளது. இங்கு சால் எண்-37 பகுதியில் நமாஜ் கமிட்டி மசூது அருகே 2 மாடிகள் கொண்ட குடிசை வீடு உள்ளது. இந்த வீடு நேற்று அதிகாலை 5.56 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அபாய குரல் எழுப்பினர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 15 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வைத்தனர். இதில், கீழ் தள வீட்டில் வசித்து வந்த ரெகானா அன்சாரி (வயது65), முகமது அன்சாரி(68) ஆகிய 2 பேர் பலத்த தீக்காயம் அடைந்து இருந்தனர். காயம் அடைந்தவர்கள் கே.இ.எம் மருத்துவமனைய்லும் , பாபா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் வீடு இடிந்து விழுந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து மாநகராட்சி அதிகாரி ''இடிந்து விழுந்த வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
