அதிவேகமாக வந்த கார் இரவு நேர கேளிக்கை விடுதி அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதி 30 பேர் படுகாயம்!

 
அதிவேகமாக வந்த கார்


 
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்பட்டு வருகிறது இரவு நேர கேளிக்கை விடுதி. இந்த விடுதி  சாண்டா மொனிகா புயூவெர்ட் பகுதியில் அமைந்துள்ளது.   இந்த கேளிக்கை விடுதிக்கு வெளியே  30க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர்.  

அதிவேகமாக வந்த கார்

அப்போது, கேளிக்கை விடுதி அமைந்துள்ள சாலையில் வேகமாக வந்த கார் அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். 

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?