நடுரோட்டில் அட்ராசிட்டி.. சமாதானம் செய்ய முயன்றவர்களை தாக்கிய போதை ஆசாமிகள்!

 
இளங்கோ

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாரதியார் தெருவை சேர்ந்த விக்னேஷ், யோகேஸ்வரன், சூர்யா, இளங்கோ ஆகியோர் காரில் குற்றாலம் சென்றனர். அங்கு குளித்துவிட்டு ராமேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ​​சங்கரன்கோவில் வழியாக, உணவகம் அருகே காரை நிறுத்தினர். அதன்பின், குடிபோதையில் இருந்த நான்கு பேரும், எதிரே வந்த காருக்கு வழி விடாமல் ரகளையில் ஈடுபட்டனர். இந்நிலையில், உணவகம் அருகே இருந்தவர்கள் ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

அப்போது சமாதானம் செய்ய முயன்ற பெரியவர்களை அடித்து கீழே தள்ளினர். இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் கீழே விழுந்த நபரை தூக்கி அருகில் உள்ள கடையில் அமர வைத்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்களையும் தாக்க ஆரம்பித்தனர், பதிலுக்கு உள்ளூர் இளைஞர்களும் தாக்கினர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web