திமுக பிரமுகரை ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயற்சி... பரபரப்பு!!

திருவண்ணாமலை வடக்கு தெருவில் வசித்து வருபவர் முத்து. இவர் முன்னாள் திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர். மேலும் இவர் கட்டிட ஒப்பந்ததாரர். செப்டம்பர் 30 ம் தேதி இரவு சுமார் 7 மணிக்கு அதே பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது முத்து சென்ற மோட்டார் சைக்கிளை ஒரு கார், 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி போளூர் சாலையில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகில் அவர்கள் மோட்டார் சைக்கிள் வரும் போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மா்ம நபர்கள் திடீரென முத்துவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துள்ளனர்.
இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் முத்துவையும், ராஜேசையும் அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். ராஜேஷ் தப்பி ஓடி ஆவின் பால் குளிரூட்டும் மையத்திற்குள் சென்றுவிட்டார். முத்துவை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை, கை உட்பட பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் தப்பியோடிய ராஜேஷ் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பொது மக்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்த முத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வடக்கு தெருவை சேர்ந்த இளைஞர் ஷியாம் என்ற இளைஞரை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வடக்குத்தெரு ஏரியாவில் பேனர் வைத்த விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை முயற்சி சம்பவம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் போலீசார் வேங்கிக்கால் பாலாஜி, ஜன்னத் நகர் அஷ்ரப், கிளிப்பட்டு அருண், ஜெய்பீம் நகர் பிரவீன் ஆகிய 5 பேரையும் கைது செய்து திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் பெயரில் 5 குற்றவாளிகளும் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!