அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி!
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை மீது ,மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக குறிதவறி மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தில் பட்டு வெடித்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அதே பகுதிக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியில் வசித்து வரும் 21 வயது வெற்றி , 21 வயது கிருஷ்ணகுமார் ,29 வயது சதீஷ் 22 வயது விஜயராஜ் என 4 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!