12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்துக்கு... மே 17 கடைசி தேதி... அதன் பிறகு ரூ.1000 அதிகம்!

 
பொதுத் தேர்வு

மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க. மே 17ம் தேதி தான் கடைசி தேதி. அதுக்கப்புறம் தட்கல் முறையில் தான் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், ரூ.1000 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். அதனால உடனடியா துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை செலுத்துங்க.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் ஒரு வருட கல்வி வாழ்க்கையை வீணாக்காமல் இருப்பதற்காக உடனடியாக கல்லூரிகளில் சேர்வதற்கு வசதியாக அந்த பாடத்தின் தேர்வை மீண்டும் எழுத இந்த துணைத் தேர்வு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 12ம் வகுப்பில் தேர்ச்சி என்பது வாழ்க்கையே அல்ல. இதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு தங்களது பிள்ளைகளை வழி நடத்த வேண்டும். அவர்களுக்குள் உள்ள பயத்தைப் போக்க வேண்டும். மீண்டும் அவர்களைத் தேர்வு எழுத உற்சாகப்படுத்தி, நம்பிக்கை அளிக்க வேண்டும். 

தேர்வுகள் இயக்ககம்

ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாதவர்கள் மே 17ம் தேதி வரை துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான http://dge.tn.gov.in இணையதளத்தை அணுகலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம்

தங்களது மதிப்பெண்களை மறு ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள்  நகல்களை  பெறுவதற்கான கட்டணம் ரூ.275 எனவும் மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305 எனவும், பிற பாடங்களுக்கு ரூ.205 என்ற வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் அல்லது தாங்கள் பயின்ற பள்ளிகளில் விசாரித்து அறிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளை மே 13ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web