மல்லிகைப் பூ முதல் குலோப் ஜாமூன் வரை 100 பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து செல்ல தடை!
ஆஸ்திரேலியாவில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் நடிகை நவ்யா நாயரை மலையாளிகள் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று, இந்தியாவிலிருந்து மெல்போர்ன் விமானம் நிலையத்தில் அவருடைய கைப்பையில் மல்லிகைப் பூவை வைத்திருந்தக் குற்றத்துக்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தின.
இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆஸ்திரேலியாவின், பயிர்ப் பாதுகாப்புக் கொள்கை, மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருவதாகவும், அவர்களது பயிர்ப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்று கருதும் எந்தவொரு பொருளையும் அந்நாட்டுக்குள் கொண்டு செல்வது குற்றம் எனவும் தெரிய வந்துள்ளது.

அதன்படி 100க்கும் மேற்பட்ட பொருள்களை ஆஸ்திரேலியாவுக்குள் வெளிநாட்டினர் கொண்டு செல்லத் தடை அமலில் இருந்து வருகிறது. அதில் குறிப்பாக காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், இலைகள், மிளகாய், பச்சை கொட்டைகள், விதைகள், காய்ந்த அல்லது மலர்ந்த மலர்கள், பால் பொருள்கள், பர்ஃபி, ரச மலாய், ரசகுல்லா, பேடா, குலாப் ஜாமூன், மைசூர் பாக்கு, சோன் பப்படி போன்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்புகளையும் கொண்டு செல்லக் கூடாது எனக் கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
