மின்பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு... மின்வாரியம் அறிவுறுத்தல்!

 
மின்சாரம்

 தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதற்கான தூய்மைப்பணிகள், முன்னேற்பாடுகளை பள்ளிகளில் செய்யச்சொல்லி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பூங்கா

சமீபத்தில்  கோவை சரவணம்பட்டி – துடியலூர் சாலையில் ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் விளையாட்டுத் திடலில் விளையாட சென்ற சிறுவர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் ஒரு முக்கிய கோரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்  பள்ளிச் சிறுவர்களுக்கு ”மின் பாதுகாப்பு” குறித்து இந்த விடுமுறை காலங்களில் சொல்லி தருவோம்.
கிரிக்கெட் பந்து எடுக்க மாடிக்கு செல்வது, மரத்தில் ஏறுவது இவைகளை தவிர்க்கச்சொல்லி அறிவுறுத்த வேண்டும். அப்படி அவசியம் ஏற்படும் சமயங்களில் மிகுந்த கவனத்துடன் மின் கம்பி, மின் கம்பம் அருகே செல்லக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

மின்சாரம்


அதன்படி பூங்காக்களிலோ, பொது இடத்திலோ விளையாடும் போது, மின் கேபிள், வயர், மின் பெட்டி இருந்தால் அருகில் செல்லவோ தொடவோ கூடாது. பிள்ளைகள் விளையாடும்போது பெரியோர் மேற்பார்வை வேண்டும். ஆசிரியர்கள் தங்களது பள்ளி குழுக்களில் அறிவுறுத்தலாம். இவைகளுடன் TANGEDCO வும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து மின்சார விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பெற்றோர், ஆசிரியர் இணைந்து நமது பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித் தருவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web