தாய்ப்பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு.. பிறந்து 6 நாட்களே ஆன நிலையில் துயரம்!

 
குழந்தை வாயில் டேப்

பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடித்துவிட்டு தூங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசப்புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (28). எலக்ட்ரீசியனான இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த மாதம் சங்கீதாவுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

குழந்தை பிரசவம்

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சங்கீதா குழந்தைக்கு பாலூட்டிவிட்டு தூங்க வைத்துள்ளார். பின்னர் 2 மணி நேரம் கழித்து குழந்தை எந்தவித அசைவும் இன்றி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே விக்னேசும், சங்கீதாவும் குழந்தையை சென்னை கஸ்தூரிபா காந்தி ஆரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல் குழந்தை கொலை மாணவி இளம்பெண்

இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, ஏப்பம் விடுவதற்காகவும் செரிமானம் ஆவதற்காகவும் சிறிது நேரம் கழித்து குழந்தையின் முதுகை லேசாக தடவலாம். இது குழந்தை ஏப்பம்விட உதவிகரமாக இருப்பதோடு, பால் வாந்தியெடுப்பதையும் தடுக்கும். இதன் மூலம் கவன குறைவால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்கலாம்" என்றார். இதேபோன்ற சம்பவம் கடந்த மாதம் சைதாப்பேட்டையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?