பகீர்... 16 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை... போக்சோ நீதிமன்றம் அதிரடி!
சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மனிதன், மிருகத்தை விட கேவலமானவனாக மாறிக் கொண்டிருக்கிறான். வாழ்க்கைச் சூழல் மீண்டும் கற்காலத்திற்கே அழைத்துச் செல்லும் விதமாகவே பெரும்பாலான ஆண்களின் புத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தன்னுடைய சொந்த மகளையே தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கீழ் அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (40). இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், இவரும், 16 வயது மகளும் தனியே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை.
இந்நிலையில், தனது மகளிடமே பாலியல் அத்துமீறலில் செந்தில் குமார் ஈடுபட்டுள்ளார். இதனை வெளியே கூறினால் கொலைச் செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். தொடர்ந்து தனது மகளிடம் அவ்வபோது பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், வாழ்க்கையை வெறுத்து, மன அழுத்தத்தில் விரக்தியடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு, பிரச்சனைகள் குறித்து கேட்டதும், மாணவி கூறிய தகவல்களைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வழக்கு தொடர்பான விசாரணை ஆரணி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்திற்காக செந்தில் குமருக்கு ஆயுள் தண்டனையும், சிறுமியை கொலை செய்வதாக மிரட்டியதற்கு கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனயும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடதலாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!