பகீர்... மருமகளை அடைத்து வைத்து சித்ரவதை... அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த மாமியார்.. வரதட்சணைக் கேட்டு கொடூரம்!

 
பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்

மத்தியப் பிரதேசத்தில் வரதட்சணைக் கேட்டு மருமகளை சித்ரவதை செய்து வந்த மாமியார், ஒரு கட்டத்தில் அறைக்குள் மருமகளைப் பூட்டி வைத்து, நிர்வாணப்படுத்தி.. காய்ச்சிய இரும்பு கம்பியால் மருமகளின் உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமைப்படுத்தி வந்த நிலையில், அப்படியும் ஆத்திரம் தீராமல் மருமகளின் அந்தரங்க உறுப்பில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து இளம்பெண்ணைக் காப்பாற்றினார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள விதிஷா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு,  சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பெண்ணின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்துள்ளார். 

தினமும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. பலமுறை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சமாதானம் செய்துவைத்தும் சண்டை  தீரவில்லை என்று கூறப்படுகிறது. தினமும் சண்டை சச்சரவுகளால் விரக்தியடைந்த அந்தப் பெண், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

Private parts

இந்நிலையில் தனது மனைவியை காணவில்லை என கணவர் உலர் செவானியா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மனைவி அவரது தாய் வீட்டில் இருப்பதை அறிந்த மாமியாரும், மைத்துனரும் அந்தப் பெண்ணிடம் சென்று சமாதானமாக பேசியுள்ளனர். கணவருடன் இனிமேல் சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்கும் வகையில் தாங்கள் நடந்து கொள்வதாக மாமியார் கூறியுள்ளார். இதை நம்பி அந்தப் பெண்ணும் மாமியார் மற்றும் மைத்துனருடன் கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் கணவன், மாமியார், மைத்துனர் ஆகியோர் சேர்ந்து அந்தப் பெண்ணை ஒரு நாள் முழுவதும் அறை ஒன்றில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை சித்திரவதை செய்ய அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி சூடான இரும்பு கம்பியால் பெண்ணின் உடல் மற்றும் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளார்.

Police-arrest

பெண்ணில் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் கூடி அறையைத் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணவர், மாமியார் மற்றும் மைத்துனர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web