பின்னணி பாடகர் வேல்முருகனுக்கு ஜாமீன்! எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார்!
![வேல்முருகன்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/0fb1e1f26f2541d53cfc5626a221a13c.jpeg)
அப்போது அந்த வழியாக மதுபோதையில் காரில் வந்த சினிமா பாடகர் வேல்முருகன் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் எந்த வித முன்னறிவிப்பு இன்றி சாலையில் பள்ளம் தோண்டி இருப்பது குறித்து கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் உதவி மேலாளர் வடிவேலுக்கும், பாடகர் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் உதவி மேலாளரை, வேல்முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வடிவேல் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு வேல்முருகனை கைது செய்தனர் .
பின்னர் போலீசார் பாடகர் வேல்முருகனை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அவரை காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். ஏற்கனவே சினிமா பாடகர் வேல்முருகன் இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் மதுபோதையில் விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!