த.வெ.கவின் 2வது மாநில மாநாடு.... இன்று மதுரையில் பந்தக்கால் !

 
தவெக பந்தக்கால்
 


 
 தமிழக வெற்றிக் கழகத்தின்  இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த மாநாடு மதுரை கூடக்கோவில் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்கான முதல் கட்டமாக, பந்தல்கால் நடும் விழா ஜூலை 16, 2025  நடைபெற்றது. இந்த விழாவில் தவெகவின் பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த்  பூமி பூஜை செய்து மாநாட்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.இந்த மாநாடு தவெகவின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
கட்சியின் முதல் மாநாடு 2024 அக்டோபர் 27 ம் தேதி  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தவெகவின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கைகளையும், மக்களுக்கான திட்டங்களையும் விளக்கியிருந்தார். இந்த 2 வது மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தவெக

மதுரையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக பரந்த இடம் தேர்வு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 300 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த மாநாட்டு திடல், ஆயிரக்கணக்கான தொண்டர்களையும், மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தயாராகி வருகிறது. பந்தக்கால் நடும் விழாவில், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தவெக

இந்த மாநாட்டில், தவெகவின் எதிர்கால திட்டங்கள், மக்களுக்கான நலத்திட்டங்கள்   2026 தேர்தலுக்கான உத்திகள் என தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தவெக தலைவர் விஜய்யின் பங்கேற்பு மற்றும் அவரது உரை, மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?