நாளை வங்கிகளுக்கு விடுமுறை!! வங்கிப்பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும் மற்றும் விடுமுறை நாட்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. நாளை புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே மாத வங்கி விடுமுறை தின பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது.
அதன்படி நாளை நாடு முழுவதும் மே 5 ம் தேதி வெள்ளிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் இம்மாதத்தில் வார இறுதி நாட்கள், 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளும் சேர்த்து இந்திய வங்கிகளுக்கு மொத்தம் 12 விடுமுறைகள் இருப்பதாக பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.
இந்த பட்டியலின் படி நாளை புத்த பூர்ணிமாவையொட்டி, திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சண்டிகர், உத்தரகண்ட், ஜம்மு, உத்தரப் பிரதேசம், வங்காளம், புது தில்லி, சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது . இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!