இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!

 
பீடி இலைகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பீடி இலைகள்

தூத்துக்குடி தாளமுத்து நகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் இன்று அதிகாலை கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் ஜீவ மணி தர்மராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ், குமார் இசக்கி முத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணில் ஈடுபட்டனர்.

பீடி பண்டல்கள்

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக டபுள் இன்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகில் சுமார் 30 கிலோ வீதம் 40 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் போலீசாரை கண்டதும் பீடி இலைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓடி விட்டார்கள். இதையடுத்து சுமார் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், பைபர் படகு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை போலீசார் சுங்கத்துறை வசம் ஒப்படைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?