சூப்பர்... 16 நாட்களுக்குள் பட்டா மாறுதல்.. இனி காத்திருக்க தேவையில்ல!
தமிழக அரசு அனைத்து அரசு நடவடிக்கைகளையும் ஆன்லைன் மூலம் மாற்றி செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாட்களுக்குள் பெற்றுவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலதாமதம், நேர விரயம், பொதுமக்களின் அலைச்சல் இவைகளை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை விரைவுபடுத்தி கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.

தாலுகா வாரியாக துணை ஆட்சியர் சிறப்பு அதிகாரிகளை நியமித்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு தாலுகாவுக்கும், ஒரு சிறப்பு அதிகாரி தலைமையிலான குழு, உரிய நேரத்தில் ஆன்லைன் வழியான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் உருவாகும் முறைகேடுகள், தாமதம் நிகழ்வதை தடுக்கும் வகையில் வெளி தாலுகாவை சேர்ந்த அதிகாரிகளை பணியில் அமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாலுகாவுக்கும் உரிய அதிகாரிகளை தேர்வு செய்து நியமிக்க, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் மூலம் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
