உஷார்... நவம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிப்பு!

 
வங்கி விடுமுறை

உங்களுடைய வங்கி பணிகளை இந்த பண்டிகை காலங்களில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கோங்க. கடைசி நேரத்தில், விடுமுறை தினங்களில் உங்கள் பணம் தொடர்பான பரிவர்த்தனைகளில் சிக்கலை சந்திக்காதீங்க. தொடர் விடுமுறை தினங்களில் வங்கி ஏடிஎம்களில் பணமில்லாமல் அவஸ்தைக்குள்ளாக நேரிடலாம். அதனால் கடைசி நேரம் வரை உங்கள் பணிகளைத் தள்ளிப் போடாதீங்க. வரும் நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பணபரிமாற்றத்தைத் திட்டமிட்டுக் கொள்ளும்படி ரிசர்வ வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கிகளுக்கு பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை அளிக்கப்படுகின்றது. வார இறுதி நாட்களுக்கான விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், பண்டிகை தின விடுமுறை தினங்கள், மாநிலங்களுக்கேற்ப உள்ளூர் பண்டிகைகளைப் பொருத்து மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது.

அந்த வகையில், தற்போது நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களையும் சேர்த்து மொத்தமாக 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை

நவம்பர் 1- புதன்கிழமை -கன்னட ராஜ்யோச்சவம், கட், கர்வா சவுத் காரணமாக பெங்களூரு, இம்பால் மற்றும் சிம்லாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5 -ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

நவம்பர் 10 – வெள்ளிக்கிழமை – வாங்கலா திருவிழா காரணமாக மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 11 - இரண்டாவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

வங்கி

நவம்பர் 12 – ஞாயிற்றுக்கிழமை – தீபாவளி பண்டிகை காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை நவம்பர்

நவம்பர் 13- திங்கட்கிழமை – கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை, தீபாவளி காரணமாக அகர்தலா, டேராடூன், கேங்டாக், இம்பால், ஜெய்ப்பூர், இம்பால்மற்றும் லக்னோவில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 14 – செவ்வாய்கிழமை தீபாவளி (பலி பிரதிபதா), விக்ரம் சம்வத் புத்தாண்டு, லக்ஷ்மி பூஜை காரணமாக அஹமதாபாத், பெலாபூர், பெங்களூர், கேங்டாக், மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது

நவம்பர் 15- புதன்கிழமை பாய் தூஜ், சித்ரகுப்த ஜெயந்தி, லக்ஷ்மி பூஜை, நிங்கால் சக்குபா / ப்ரத்ரி துவிதியா காரணமாக கேங்டாக், இம்பால், கான்பூர், கொல்கத்தா, லக்னோ மற்றும் சிம்லாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 19 -ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

நவம்பர் 20 - சாத் பூஜையால் பாட்னா மற்றும் ராஞ்சியில் வங்கிகள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது..

நவம்பர் 23- வியாழன்கிழமை செங் குட் ஸ்னெம் காரணமாக மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 25 - நான்காவது சனிக்கிழமை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

நவம்பர் 27 – திங்கட்கிழமை குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பௌர்ணமி காரணமாக அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுஹாத்தி, ஐதராபாத், இம்பால், கொச்சி, பனாஜி, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் ஷில்லாங்கில் உள்ள வங்கிகள் தவிர நாடு முழுவதும் வங்கிகளுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 30 - கனகதாச ஜெயந்தி காரணமாக பெங்களூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web