உஷார் மக்களே... ஜூலை 15ம் தேதி வரை 2 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்!

பத்திரமாக இருங்க மக்களே... ஜூலை 15ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் த்ரிவித்துள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
பிற பகுதிகளில் வெப்பச்சலன மழை பெய்கிறது. அந்தவகையில் ஜூன் மாதம் இயல்பை விட 14 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த ஜூலை மாதத்தில் மழை, வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென்னிந்திய பகுதிகளில் ஜூலை மாதத்தில் வெப்பநிலை இயல்புக்கு அதிகமாகவும், மழை இயல்புக்கு குறைவாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் 'ஜூலை மாதம் 15ம் தேதி வரை தமிழ்நாட்டில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும்.
கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக இல்லாத சூழல், தொடர்ச்சியாக வறண்ட வானிலை போன்ற காரணங்களால் இந்த உணரும் வெப்பநிலை ஏற்படுகிறது. 2-வது வாரத்துக்கு பிறகு தென்மேற்கு வங்கக்கடலில் காற்று சுழற்சி உருவாகி, அது ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
அது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மழை இருக்கும். அதேபோல், தென்மேற்கு பருவமழையும் 2 வது வாரத்துக்கு பிறகுதான் மீண்டும் தீவிரம் அடையும். இதே மாதிரியான நிலைதான் ஆகஸ்ட் மாதத்திலும் இருக்கும்' என தெரிவித்துள்ளார். இதேபோல் மற்ற வானிலை ஆய்வாளர்களும் பகல் நேரம் வெப்பம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!