உஷார்... சென்னை உட்பட 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை உட்பட 32 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தர்மபுரி, வேலூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திருவாரூர், சிவகங்கை, நாகை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
