செம... சென்னை நாகர்கோவில் இடையே வாரத்துக்கு 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்!

 
வந்தே பாரத்

 இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது. விரைவான மற்றும் சொகுசு பயணங்களுக்காக வந்தே பாரத் ரயிலை பயணிகள் நாடி வருகின்றனர்.  இந்நிலையில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்தில் 4  நாட்கள் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஜூலை 11, 12, 13 ,14 ,18, 19 ,20, 21  தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பிற்பகல் 1:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து 2:20 புறப்படும் வந்தே பாரத் ரயில்  இரவு 11 மணிக்கு சென்னை வந்தடையும்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web