வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் !! பரபரப்பு!!

 
தண்ணீர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் பெங்களூரு நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கனமழை மற்றம் வெள்ளத்தில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தண்ணீர்

குறிப்பாக பெங்களூருவீல் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதற்குள் சென்ற காரில் இருந்த இளம்பெண் ஒருவர் காருக்குள் சிக்கியவாறு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் தாழ்வான இடத்தில் இருந்த நகைக் கடைக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதில் கடையின் தரைத்தளத்தில் இருந்த சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  

தண்ணீர்

கடையில் இருந்த சுமார் 80 சதவிகித நகைகள் வெள்ளத்தில் அடித்து சென்றதாக கடையின் உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். நகைகளை மீட்பது தொடர்பாக மாநகராட்சியிடம் நகைக்கடை உரிமையாளர் உதவி கோரி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web