தொடரும் அதிர்ச்சி மரணங்கள்!! தோசை சாப்பிட்ட கல்லூரி மாணவர் காலையில் பலி!!

 
ரிஷி

நெல்லையில் உள்ள சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் வினோத் கண்ணன். இவரது மகன் ரிஷி ஆச்சார்யா(20). இதில் வினோத் கண்ணன் மும்பையில் வேலை செய்வதால், அவரது குடும்பத்தினரும் மும்பையிலேயே தங்கி வசித்து வந்தனர்.

ஆனால், அவரது மகன் ரிஷி ஆச்சார்யா மட்டும் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். மாணவர் ரிஷி ஆச்சார்யா நேற்று இரவு வழக்கம்போல் உறவினர்களோடு சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் தொடர்ந்து தூங்கவும் சென்றார். 

ரிஷி

இந்நிலையில் நள்ளிரவில் ரிஷி ஆச்சார்யாவுக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அறிந்த உறவினர்கள் உடனே ஆம்புலன்ஸ் பிடித்து அவரை நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவி சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி இன்று காலையில் கல்லூரி மாணவர் ரிஷி ஆச்சார்யா பரிதாபமாக உயிர் இழந்தார். 

ரிஷி

இதுகுறித்து நெல்லை பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோசை சாப்பிட்டதால் இளைஞர் உயிரிழப்பா, அல்லது நீண்டநேரம் தொண்டை, உணவுக்குழாயில் சிக்கியதால் உயிரிழந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web