சென்னை விமான நிலையத்தின் 4வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

 
ஜஸ்வர்யா

சென்னையை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி- ஜஸ்வர்யா (33) தம்பதி வசித்து வந்தனர்.  இவர்களுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும் மகனும் 5ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். பாலாஜி  இவர் அமெரிக்காவில் கோயில் ஒன்றில் சமையல் வேலை செய்து வருகிறார். ஜஸ்வர்யா குழந்தைகளுடன் சென்னையிலும் வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக ஜஸ்வர்யா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் ஜஸ்வர்யா தனது 2 குழந்தைகளுடன் விமான நிலையத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது  திரையரங்கில் குழந்தைகளை அமர வைத்து விட்டு கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு திரையரங்கில் இருந்து வெளியேறியுள்ளார். 

ஜஸ்வர்யா

இதற்கிடையில் வெளியே வந்த ஜஸ்வர்யா உள்நாட்டு முனையம் நடைபாதை வழியாக, பன்னாட்டு முனையம் அருகே உள்ள அடுக்கு மாடி கார் பார்க்கிங் பகுதிக்கு ஒடி சென்றார். திடீரென 4ஆவது மாடிக்கு சென்ற ஜஸ்வர்யாவை கண்ட அங்குள்ள கார் ஓட்டுநா்கள் சத்தம் போட்டு தடுக்க முயன்றனர். அப்போது, திடீரென 4வது மாடி தடுப்பு சுவரில் ஏறி குதித்து கீழே விழுந்த ஜஸ்வர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இது பற்றி, தகவல் அறிந்த விமான நிலைய போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திரையரங்கில் இருந்த குழந்தைகள் மற்றும் உறவினர்களை அழைத்து போலீசார் விசாரித்தபோது கடந்த 2 நாட்களாக அதிகமான மன அழுத்தத்தில் இருந்த ஜஸ்வர்யா சினிமா பார்க்க குழந்தைகளை அழைத்து சென்றார்.

ஜஸ்வர்யா

அவா்களை திரையரங்கில் விட்டு விட்டு கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web