ஒடிசாவில் ஆட்சியை பிடித்த பாஜக... தொண்டர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. அருணாசலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் அந்த கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.
அதே போல் 147 தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் ஆட்சியமைக்க 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தொடக்கத்தில் இருந்தே ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் பின்தங்கி வருகிறது. இங்கு 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக், தனது கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், 12 மணி நிலவரப்படி பா.ஜ.க. 78 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மையை கடந்தது. பிஜு ஜனதா தளம் 54 இடங்களில் முன்னிலையுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
காங்கிரஸ் 11 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. 2 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருந்தனர். அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணப்படும்போது, பா.ஜ.க.வின் வெற்றி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஒடிசாவில் முதல் முறையாக பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளதால் தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!