பெரும்பான்மையை இழந்த பாஜக அரசு... ஹரியானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி?!

 
ஹரியானா

 இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை ஹரியானாவில் பாஜகவிற்கு  ஆதரவு அளித்து வந்த  3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.  குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஹரியானா
ஹரியானா மாநிலத்தில் 2014ல்  தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்தது.  2019ல்  சட்டபேரவைத் தேர்தலில், 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.  காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி 10 இடங்களிலும், லோக் தள் கட்சி 1 இடத்தில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி வாகை சூடினர். இதனையடுத்து 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா  கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சியை பிடித்தது.  தற்போது நடைபெற்று வரும்  மக்களவைத் தேர்தலின் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் பாஜகவுடன் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால்  ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியை முறித்துக் கொண்டது.  முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஹரியானாவின் புதிய முதல்வராக   நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார்.

ஹரியானா

இந்நிலையில்  பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாக சோம்பீர் சங்வான்,  ரந்தீர் கோலன் மற்றும் தரம்பால் கோண்டர்  ஆகியோர் அறிவித்துள்ளனர்.   ஹரியானாவில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்தது.  ஹரியானா முன்னாள் முதல்வர்   பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன்  முன்னிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த 3  சுயேட்சை வேட்பாளர்களும், “நாங்கள் பாஜக தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். எங்கள் ஆதரவை காங்கிரசுக்கு வழங்குகிறோம் என அறிவித்துள்ளனர். 


ஜனநாயக ஜனதா கட்சி அதன் ஆதரவை திரும்பப் பெற்றுவிட்டது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.  இதனையடுத்து சட்டசபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஹரியானாவில் பாஜகவுக்கு எதிரான சூழல்தான் நிலவி வருகிறது. எனவே மாற்றம் நிச்சயம்” எனக் தகவல்கள் வெளியாகியுள்ளன.  
ஹரியானா சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.  ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இழந்ததால் அங்கு ஆட்சி கவிழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஹரியானாவில் பாஜக அரசு கலைக்கப்பட்டு தேர்தல் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்கின்றன அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web