பாஜக பெரும் பின்னடைவு.... தமிழகத்தில் கதறும் பிஜேபி வேட்பாளர்கள்!
![வாக்கு எண்ணிக்கை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/6ed0fbfc3d2b5997f584a9b65e77a0b5.png)
தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது . இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது எனக் கூறி வந்த பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பின்னடைவு அடைந்துள்ளார்.
அதேபோல தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் , கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் , நீலகிரியில் போட்டியிட்ட எல் முருகன், திருநெல்வேலியில் களம் கண்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மத்திய சென்னையில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம் , விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் , மதுரையில் போட்டியிட்ட ராம ஸ்ரீனிவாசன் அனைவருமே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
அதேபோல ராமநாதபுரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேனியில் டிடிவி தினகரன், வேலூரில் ஏசி சண்முகம் , பெரம்பலூரில் களம் கண்ட பாரிவேந்தர் , தென்காசியில் ராஜ் பாண்டியன் ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இருப்பினும் தர்மபுரியில் பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!