பாஜ பெண் நிர்வாகி ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி... வழக்குப்பதிவு!

 
அம்பிகா
தேனி மாவட்டம், கம்பம் அருகே உத்தமபுரம் பகுதியில் வசித்து வருபவர்  அம்பிகா .  இவரது மகன் பிஇ பட்டதாரி.  2023ல் அம்பிகாவுக்கு ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியில் வசித்து வரும்  பாஜ மகளிரணி மாவட்ட செயலாளர் சின்னத்தாய் அறிமுகமானார். அப்போது இவர், அம்பிகாவின் மகனுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.1.50 லட்சம் வரை செலவாகும் எனக் கூறினார்.  

போலீஸ்


இதனை நம்பி அம்பிகா கடந்தாண்டு ஜூலை மாதம் சின்னத்தாய் மற்றும் அவரது உறவினர் பட்டை நாகராஜ் ஆகியோரிடம் ரூ.50000 கொடுத்துள்ளார். அதன் பிறகு ரூ.50000ஐ  தவணை முறையில் பட்டை நாகராஜின் அக்கவுண்டுக்கு அம்பிகா அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஆனால், வேலை வாங்கித் தராமல் இருவரும் ஏமாற்றி வந்தனர்.  ஜூன் 14ம் தேதி அம்பிகா, டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில்  சின்னத்தாய் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்ட போது சின்னத்தாய் மற்றும் அவரது மகன் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.  இதுகுறித்து அம்பிகா  ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சின்னத்தாய், பட்டை நாகராஜ் மற்றும் சின்னதாயின் மகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?