ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் பரிதாபமாக பலி!
மத்திய பிரதேச மாநிலம் குணா என்ற இடத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள 140 அடி ஆழ்துளை கிணறு அருகே நேற்று சுமீத் மீனா என்ற 10 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நிலை தடுமாறி சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று காலை 9.30 மணியளவில் சிறுவன் மீட்கப்பட்டான். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

இதற்கிடையில், ராஜஸ்தானின் கோட்புட்லியில், 700 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் இருந்து மூன்று வயது சேத்னாவை மீட்கும் நடவடிக்கை ஏழாவது நாளை எட்டியுள்ளது. புதன்கிழமை (டிசம்பர் 25) பைலிங் இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதற்கு இணையான குழி தோண்டப்பட்டது. வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. பலமுறை முயற்சி செய்தாலும், சேத்னாவுக்கு உணவு அல்லது தண்ணீர் வழங்க மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். ஆம்புலன்ஸுடன் டாக்டர்கள் குழுவும் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
