BREAKING: ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

 
ராகுல்காந்தி


பாஜக குறித்து அவதூறு பரப்பியதாக சித்தராமையா, டிகே சிவகுமார், ராகுல் காந்தி ஆகியோர் மீது கர்நாடக பாஜக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் கர்நாடக பாஜக தொடர்ந்திருந்த அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜரான  ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.  ஏற்கெனவே சித்தராமையா, டிகே சிவகுமார் ஆகியோர் ஏற்கெனவே ஜாமின் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கர்நாடக மாநில பாஜக தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி, இன்று காலை டெல்லியில் இருந்து பெங்களூரு வந்தடைந்த நிலையில், நீதிமன்றம் ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

ராகுல்

கடந்த 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்தன. இது பாஜக மீது அவதூறு பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்டிருப்பதாக கர்நாடக மாநில பாஜக குற்றம் சாட்டியதோடு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 
இந்த வழக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தேர்தல் காரணமாக கடந்த ஜூன் 1ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று நீதிமன்றத்தில், ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web