திணறுது மூச்சு... திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்... 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

 
திருச்செந்தூர்

இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூரில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் குழுமியுள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடு  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவில் மிகச் சிறந்த பரிகாரத் தலமாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும்  தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். 

திருச்செந்தூர்

இந்நிலையில் தொடர் விடுமுறை என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்துள்ளனர். அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் நடந்தது. தொடரந்து மற்ற கால பூஜைகள் நடந்து வருகின்றன.  கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

திருச்செந்தூர் பக்தர்கள் திருப்பதி

பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கோவில் வளாகம், வள்ளி குகை, கடற்கரைப் பகுதி, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குதித்து விளையாடி மகிழ்ந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?