அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்!
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாக பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது..
இது குறித்து பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் குறித்து மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு தீவிர கவலைகளை அளிப்பதாகவும், அவை உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலக அளவில் வர்த்தகம் குறையவும், விநியோகச் சங்கிலிகள் சீர்குலையவும், நிச்சயமற்ற தன்மை ஏற்படவும் இவை வழிவகுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2035 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5%-ஐ ராணுவ செலவினங்களுக்கு கூடுதலாகச் செலவிடுவது என்ற நேட்டோ நாடுகளின் முடிவை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கடுமையாக விமர்சித்தார். சமாதானத்துக்காக செலவிடுவதைவிட போருக்காக செலவிடுவது எப்போதுமே எளிதானது என்று அவர் விமர்சித்தார்.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், அந்த தீர்மானத்தில் இஸ்ரேல் பெயரோ, அமெரிக்காவின் பெயரோ இடம்பெறவில்லை. காசாவில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தீவிர கவலையை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரிக்ஸ் நாடுகள், பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளையும் அங்கீகரிப்பதே பிரச்சினைக்குத் தீர்வு என்றும் பிரிக்ஸ் யோசனை தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பான தீர்மானத்தில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
