30 சவரன் நகை, பணத்துடன் மாயமான மணப்பெண் தஞ்சாவூரில் மீட்பு!
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வீட்டிலிருந்த 30 சவரன் நகைகளுடனும், பணத்துடனும் நாகர்கோவிலில் இருந்து மாயமான மணப்பெண் தஞ்சாவூரில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் வடசேரி வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் மிருதுளா குமார் (53), லாரி ஓட்டுநரான இவரது மகள் ஆரதி (23). பி.காம் பட்டதாரியான இவருக்கு வருகிற 4ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருமண அழைப்பிதழ் கொடுக்க பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், ஆரதி மட்டும் வீட்டில் தனியே இருந்தார். வெளியே சென்ற மிருதுளா குமார் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் மகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் திருமணத்திற்காக வீட்டில் வைத்திருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.30,000 பணத்துடன் ஆரதி மாயமாகி இருந்தார்.

இது குறித்து மிருதுளா குமார் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ஆரதி தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தான் தஞ்சாவூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச் செல்லுமாறும் கூறினார். இதையடுத்து பெற்றோர் வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மகளை அழைத்து வருவதற்காக ஆரதியின் பெற்றோர் தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவரை மீட்டு அழைத்து வந்தால் தான் வீட்டிலிருந்து எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரிய வரும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
