ஒரே இடத்தில் அண்ணன், தம்பியைக் கொன்று புதைத்த கொடூரம்... 5 பேர் கைது!
தூத்துக்குடியில் அண்ணன்-தம்பி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள பண்டுகரை பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன்களான மாரி பாண்டியன் மற்றும் பார்வை மாற்றுத்திறன் கொண்ட அருள்ராஜ் ஆகியோரை முன் விரோதம் காரணமாக மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். தனியார் அனல்மின் நிலையத்தின் பின்புறம் உப்பாற்று ஓடை பண்டுகரையில் அவர்கள் 2 பேரும் கொன்று புதைக்கப்பட்டிருந்தனர்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 பேர் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 2 பேரையும் கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, மாரிபாண்டியனின் உறவினரான கோவில்பிள்ளை நகரை சேர்ந்த ரிதன்(25) என்பவரின் சகோதரர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு மாரிபாண்டி மற்றும் அருள்ராஜ் ஆகியோர் தான் காரணம் என்று ரிதன் கருதியுள்ளார். இதையடுத்து கடந்த 28-ந்தேதி ரிதன் மற்றும் அவரது கூட்டாளிகளான முனீஸ்வரன், முகமது மீரான், சங்கர் மற்றும் ஒரு இளஞ்சிறார் உள்ளிட்டோர் சேர்ந்து மாரிபாண்டி மற்றும் அவரது சகோதரர் அருள்ராஜ் ஆகிய இருவரையும் கம்பு, கல்லால் தாக்கி உப்பாற்று ஓடைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

அங்கு வைத்து 2 பேரையும் சரமாரி தாக்கியதில் அவர்கள் இறந்தனர். தொடர்ந்து அவர்கள் உடலை அங்கேயே அந்த கும்பல் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் கூடுதலாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
