கேம் விளையாட செல்போனை தர மறுத்த தம்பி.. ஆத்திரத்தில் சுத்தியால் அடித்து கொன்ற அண்ணன் கைது!
ஆந்திராவை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி சன்னம்மா. தம்பதிக்கு சிவக்குமார் (18), பிரனேஷ் (14) என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்த தம்பதியினர் கூலி வேலை செய்து வருகின்றனர். இதற்காக பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேகல் தாலுகாவில் உள்ள சர்ஜாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தனர். சிவக்குமார் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெற்றோருடன் கூலி வேலை செய்து வந்தார். இதற்கிடையில் அவரது சகோதரர் பிரனேஷ் ஆந்திராவில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இதற்கிடையே கோடை விடுமுறை என்பதால் பெற்றோரை பார்க்க பிரனேஷ் வந்துள்ளார். இதற்கிடையில், பிரனேஷ் இரண்டு நாட்களுக்கு முன்பு புறநகர் பகுதியில் தலை மற்றும் வயிற்றில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சர்ஜாபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிரனேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் விசாரணையில், சிறுவன் ஆயுதத்தால் கொல்லப்பட்டது தெரியவந்தது.
ஆனால் கொலைக்கான காரணம் முதலில் தெரியவில்லை. அப்போது பிரனேஷின் சகோதரர் சிவக்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே சிவகுமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியிடப்பட்டது.அதாவது செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் சிவகுமாருக்கு அதிக ஆர்வம். இதற்கிடையில் அண்ணன் பிரனேஷ் சிவகுமாரின் செல்போனை வாங்கி விளையாடி வந்துள்ளார். செல்போனை ஒப்படைக்கும்படி சிவக்குமார் அண்ணனை எச்சரித்துள்ளார். ஆனால் பிராணேஷ் செல்போனை கொடுக்கவில்லை என தெரிகிறது.
செல்போனை தர மறுத்த தம்பியை தண்டிக்க சிவக்குமார் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றனர். பின்னர் சிவக்குமார் தனது சகோதரனை அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு கொண்டு வந்த சுத்தியலால் பிரனேஷின் தலை மற்றும் வயிற்றில் அடித்தார்.

இதில் தலை மற்றும் வயிற்றில் பலத்த காயம் அடைந்த பிரணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியின் அடிப்படையில் தான் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். செல்போனை தர மறுத்ததால் அண்ணன் சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
