பேருந்தும், போலீஸ் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து... 16 பேர் உடல் நசுங்கி பலி!
தெற்கு ஆப்பிரிக்காவில் நமீபியாவில் ஹர்டெப் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மெரிண்டெல் நகரில் நேற்று முன் தினம் மாலை சிறைத்துறை பேருந்தில் போலீசார், கைதிகள் உட்பட 13 பேர் பயணம் செய்தனர். அந்த பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, போலீசார் 6 பேருடன் வந்தகொண்டிருந்த போலீஸ் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறைத்துறை பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் 14 போலீசார் உட்பட 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
