தமிழக மக்களின் பிரச்சனையைத் தீர்க்க முடியல... நாட்டு பிரச்சனையைத் தீர்க்க கனவு காண்கிறார்... ஆவேசமடைந்த ஜி.கே.வாசன்!

 
வாசன்

திமுக அரசு தொடர்ந்து மக்களுக்கு துரோகம் செய்து வருவதாக நேற்று திருச்சியில் செய்தியாளர்களைச்  சந்தித்த போது, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன் மேலும் பேசுகையில், சொந்த மாநில மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாதவர்கள், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்னைகளை தீர்க்க கனவு காண்பதாகவும் முதல்வரின் வடமாநில பயணம் குறித்து கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி தேசிய தலைவர்களின் கூட்டம் ஒத்த கருத்துகள் எட்டாமல் பாதியிலேயே முடிந்துள்ளதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

வாசன்

மணிப்பூர் மாநில கலவரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் விதி மீறல்கள் சிறிதும் இல்லை. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையை திமுக பெரிது படுத்துகிறது. தமிழக ஆளுநர் அவரது கருத்து சுதந்திரத்துக்கு உட்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதில் என்ன தவறு இருக்கிறது. திமுக அரசு கண்மூடித்தனமாக மக்கள் மீது வரிகளை சுமத்தி வருகிறது. மின்சாரக் கொள்கையிலும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது. இது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.

வாசன்

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் 500 டாஸ்மாக் கடைகளை திமுக அரசு மூடியுள்ளதாக தெரிவித்தார்.  திருச்சியில் கழிவுநீர் வாய்க்கால் திட்டம், மழை நீர்வடிகால் திட்டம் ஆகியவை மிகவும் மோசமாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் ஈரோட்டில் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது என்று கூறினார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web