காரும் , லாரியும் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி... 4 பேர் கவலைக்கிடம்!!

 
விபத்து

அஸ்ஸாம் மாநிலம்  உடல்குரி மாவட்டத்தில் டின்சுக்கியாவிலிருந்து திமாகுட்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 6பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.  சைக்கியா சுபுரி  பகுதியில்  கார்  ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்தது. இதனால்  கார், எதிரில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

விபத்து

இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  படுகாயம் அடைந்தவர்களில், லாரி ஓட்டுனர் மற்றும் காரில் பயணித்த 3 பேர் என 4 பேரை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து

அத்துடன் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web