தலைவிரித்தாடும் சாதி வெறி.. தி.மு.க பெண் கவுன்சிலர் பகீர் குற்றச்சாட்டு.. வைரலாகும் ராஜினாமா கடிதம்!

 
சின்னதாய்

நெல்லை மாநகராட்சி 36வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த சின்னதாய், பெண் கவுன்சிலராக உள்ளார். மேயரிடம் அவர் அளித்த ராஜினாமா கடிதம் நேற்று வெளியானது.

மேலிட எம்எல்ஏக்களுடன் சேர்ந்து பழிவாங்கும் நோக்கில், எனது வார்டுக்கு குடிநீர் வழங்கும் நடைமுறையை மாநகராட்சி ஆணையர் மாற்றிவிட்டார்' என சின்னத்தாய் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். சாதி வெறி தலைவிரித்தாடுவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலின்போது பல்வேறு வகையில் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

இந்த கடிதம் குறித்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம் ஊடகத்தினர் கேட்டபோது, இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார். கவுன்சிலர் சின்னத்தாய் கணவர் கிருஷ்ணா இது குறித்து கூறியதாவது, மாநகராட்சி கமிஷனரிடம் அதிகாரபூர்வமாக ராஜினாமா கடிதத்தை கொடுக்க மாட்டோம் என்றார்.

இந்நிலையில், பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் உறுதி அளித்ததாக கூறிய கிருஷ்ணன், அவரது ஆலோசனையை ஏற்று ராஜினாமா முடிவை கைவிட்டதாக தெரிவித்தார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web