பகீர் சிசிடிவி காட்சிகள்... அஜித் சம்பவத்தை அடுத்து மற்றொரு இளைஞர் மீது போலீசார் சராமாரி தாக்குதல்!

 
போலீசார் சராமாரி தாக்குதல்


 சிவகங்கை மாவட்டம் இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அதேபோல் மற்றொரு அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதன்படி தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் 14.1.2025 அன்று பட்டியலின இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் ஆய்வாளர் அபுதுல்லா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு ஆகியோர் இளைஞரை தாக்கியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில்   மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின் பேரில். காவல் ஆய்வாளர் அபுதல்ஹா, காவலர்கள் மாரிச்சாமி, பாண்டி  உட்பட 5 பேர் தேனி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அஜித்
ஜனவரி 14 ம் தேதி  மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக ரமேஷ் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, அவர் காவலர்களுடன் ஆபாசமாகப் பேசியதாக தெரிகிறது.  இதனால் காவல் ஆய்வாளர் அபுதல்ஹா, சிறப்பு உதவி ஆய்வாளர் சுயசம்பு   காவலர்கள் அவரை லத்தி மற்றும் கால்களால் தாக்கியதாக தெரிகிறது.
இதனையடுத்து காவல் நிலையங்களில் இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?